பாஜக மாவட்ட தலைவர் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு தலைமைக்கு கடிதம்…

published 1 year ago

பாஜக மாவட்ட தலைவர் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு தலைமைக்கு கடிதம்…

கோவை: கோவை மாவட்ட பாஜக தலைவராக பதவி வகித்து வந்த பாலாஜி உத்தம ராமசாமி தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு பாஜக மாநில தலைமைக்கு கடிதம் விடுத்துள்ளார், அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்ட பாஜக மாநில தலைமை கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவரை நியமித்துள்ளது.

இதுகுறித்து பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயமுத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய கடிதத்தினை ஏற்றுக் கொண்டு இன்று முதல் மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயமுத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளர் ஆக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய கோவை மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe