ஆர்.எஸ்.புரத்தில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் கைது

published 1 year ago

ஆர்.எஸ்.புரத்தில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் கைது

கோவை: கோவையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரம் வண்டிப்பேட்டை சந்திப்பில் சக போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சாலை விதிமுறைகளை மீறி பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மதுசூதனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றார்.

இதைப்பார்த்த மற்ற போலீசார் அவரை தடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில் போலீசாரை தாக்க முயன்றது மருதமலை அடிவாரத்தில் தேங்காய் கடை நடத்தி வரும் மர்லின் (35) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe