கோவை அரசு மருத்துவமனையில் வாலிபர் மர்ம மரணம்

published 1 year ago

கோவை அரசு மருத்துவமனையில் வாலிபர் மர்ம மரணம்

கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe