பெண் இன்ஜினியரிடம் ரூ. 13.64 லட்சம் நூதன மோசடி...

published 1 year ago

பெண் இன்ஜினியரிடம் ரூ. 13.64 லட்சம் நூதன மோசடி...

கோவை: கோவையில் பெண் இன்ஜினியரிடம் ரூ. 13.64 லட்சம் நூதன மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை வேலாண்டிபாளையம் கே.கே புதூரை சேர்ந்தவர் தனலட்சுமி(49). இன்ஜினியர். இவரது டெலிகிராமிற்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைன் செயலி மூலம் நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கை முடித்து கொடுத்தால் அதிகளவில் பணம் கிடைக்கும் எனவும், அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய தனலட்சுமி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து ஆன்லைனில் சிறிது, சிறிதாக மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 13.64 லட்சம் செலுத்தினார். 

ஆனால் அவருக்கு எந்த விதமான தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட கேட்ட போது ரூ. 16.50 லட்சம் செலுத்தினால் தான் நீங்கள் முதலீடு செய்த தொகையை லாபத்துடன் திரும்ப எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தனலட்சுமி இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe