கோவையில் செல்போன் திருடிய வாலிபர் கைது…

published 1 year ago

கோவையில் செல்போன் திருடிய வாலிபர் கைது…

கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பர்துமான்(23). இவர் கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பர்துமான் தனது அறையில் செல்போனை சார்ஜில் போட்டு விட்டு குளிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. 

அவர் உடனே இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் செல்போன் திருடியது வேலூர் சங்கராபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல்(21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe