ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட வாக்கத்தான்...

published 1 year ago

ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட வாக்கத்தான்...

கோவை: கோவையில் ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட வாக்கத்தான் போட்டி.

உலகம் முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தன்னார்வ அமைப்புகள் உட்பட ஏராளமானோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக மாற்று திறனாளிகள், ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்கத்தான் நடைபெற்றது. இதில் பாதிப்புக் குள்ளானவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும்,பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது. 

இதில் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏராளமானவர் வாக்கத்தானில் ஆர்வமுடன் பங்கேற்று உற்சாகத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக வாரந்தோறும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி தருவதற்கான யாசியா (YASYA) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe