மிக்ஜாம் புயல் பாதிப்புகள்-கோவை மாநகராட்சி ஆணையாளர் செய்த அற்புத செயல்...

published 1 year ago

மிக்ஜாம் புயல் பாதிப்புகள்-கோவை மாநகராட்சி ஆணையாளர் செய்த அற்புத செயல்...

கோவை: மிக்ஜாம் புயல் சென்னையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி சார்பில் 400 துப்புரவு பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகளுக்காக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பம்பு தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தயாராக இருந்த 41HP திறன் கொண்ட 4 லட்சம் லிட்டர் மழைநீர் வெளியேற்றும் 6 அதிநவீன இராட்சத மோட்டார்களை கொள்முதல் செய்து அனுப்பி வைத்தார். மேலும் அவரும் சீரமைப்பு பணிக்காக சென்னை புறப்பட்டார்.

மேலும் கூடுதல் எண்ணிக்கையில் மோட்டர்கள் அனுப்ப மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் 6 மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe