கோவையில் கைதிகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - சிறைத்துறை எஸ்பி தகவல்

published 1 year ago

கோவையில் கைதிகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - சிறைத்துறை எஸ்பி தகவல்

கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க
செக்கு இயந்திரங்கள் வாங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.


இதுகுறித்து சிறைத்துறை எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது:


கோவை மத்திய சிறையில் கைதிகளால் போர்வை, துண்டு, கால் மிதி, கைக்குட்டை, லுங்கி, கடலை எண்ணெய் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விற்க சிறை வாளகத்தில் பிரீடம் சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது உள்ள 2 பெட்ரோல் பங்கை  விரிவு படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கைதிகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ரூ.17 லட்சத்தில் 2 நவீன செக்கு இயந்திரங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டது.

 
மேலும் இரண்டு செக்கு இயந்திரங்கள் வாங்க தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe