காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர்...

published 1 year ago

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர்...

கோவை: கோவையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகளை அதே பகுதியை சேர்ந்த மதன்(27) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மதன், அவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் இளம்பெண் மறுத்து விட்டார். 

இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தில் வைத்து, தன்னை காதலிக்கவில்லையென்றால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவரை தாக்கி கீழே தள்ளினார். இதனால் அந்த இளம்பெண் சத்தம் போடவே, மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்தவர்கள் காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் மதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe