கோவையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பீர் வாங்கிய வாலிபர்கள்

published 1 year ago

கோவையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பீர் வாங்கிய வாலிபர்கள்

கோவை: கோவையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பீர் வாங்கிச் சென்ற வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலைய பகுதியில் வசிக்கும் முருகப்பன் (27) என்பவரை கடந்த 10ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கி (ஏர் கன்) காட்டி மிரட்டி 3 பீர் பாட்டில் வாங்கி சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக முருகப்பன் க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இப்புகாரில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி புலன் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஃபெலோப்பியன் ராஜ் மகன் விபின் ஆரோக்கியம் (21), ராஜன் மகன் அர்ஜுன் (23) மற்றும் சுகுமாரன் மகன் சுதேஷ் (21) ஆகியோர் மேற்படி குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்து.

தொடர்ந்து 3 நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து ஏர்கனை பறிமுதல் செய்தும், அந்த நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

குற்றசம்பவங்கள் தொடர்பான புகார்களை கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe