உடையாம்பாளையத்தில் சர்க்கரை நோயாளி நிலைதடுமாறி பலி.!

published 1 year ago

உடையாம்பாளையத்தில் சர்க்கரை நோயாளி நிலைதடுமாறி பலி.!

கோவை: சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி(72). இவர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி அவரது மகன் சேகர்(42) வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சரஸ்வதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சேகருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டுக்கு விரைந்து வந்த அவர் சரஸ்வதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe