வேலைக்கு சென்ற இடத்தில் வேலையை காட்டிய பட்டறை தொழிலாளி…

published 1 year ago

வேலைக்கு சென்ற இடத்தில் வேலையை காட்டிய பட்டறை தொழிலாளி…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் சுமிதேஷ்(35). நகைப்பட்டறை உரிமையாளர்.

இவரது பட்டறையில் கடந்த 8 மாதங்களாக சொக்கம்புதூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி(48) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில், நகைப்பட்டறையில் ரூ. 88 ஆயிரம் மதிப்பிலான 40 கிராம் தங்கத்தை காணவில்லை. சுந்தரமூர்த்தியும் வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுமிதேஷ் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நகைப்பட்டறையில் வேலை பார்த்த சுந்தரமூர்த்தி தங்கத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 30 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe