கோவையில் இரும்பு திருடிய இருவர் கைது

published 1 year ago

கோவையில் இரும்பு திருடிய இருவர் கைது

கோவை: மதுக்கரையை சேர்ந்தவர் சுரேஷ், 29, தனியார் நிறுவனத்தில் சைட் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் ராமநாதபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் சைட்டில் இருந்த இரும்பு கம்பிகளை திருடி தப்பி செல்ல முயற்சி செய்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் சிந்தாமணியை சேர்ந்த மணிகண்டன், 30, மற்றும் முகமது ரபிக், 45, என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe