கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் மோசடி செய்த இளம்பெண் கைது

published 2 years ago

கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் மோசடி செய்த இளம்பெண் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கொழிஞ்சாம்பாறை, ஜூன்.26- கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் கண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

 அதில் கூறியிருப்பதாவது:-

நான் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தேன். அப்போது பின்ஷா தோமஸ்(34) என்ற இளம்பெண் எனக்கு அறிமுகமானார். அவர் தான் ரயில் நிலையத்தில் டி.டி.ஆராக பணிபுரிந்து வருவதாக கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும் நீங்கள் வேலை தேடி அலைவதை அறிந்தேன். உங்களுக்கு ரயில்வே நிர்வாகத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன். அதற்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் தருமாறு கூறினார். நானும் அதனை உண்மை என நம்பி பணத்தை கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பின்ஷா தோமஸ் இதுபோன்று மேலும் 3 பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த கண்ணூர் பகுதியில் பதுங்கி இருந்த பின்ஷாதோமஸை போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில் இவர் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இந்த மோசடிசெய்து பல லட்சம் ரூபாயை ஏமாற்றியது தெரியவந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe