விபத்தில் வட மாநில தொழிலாளி பலி யார் அவர்? போலீசார் விசாரணை…

published 1 year ago

விபத்தில் வட மாநில தொழிலாளி பலி யார் அவர்? போலீசார் விசாரணை…

கோவை: கோவை அடுத்த மதுக்கரை மைல்கல் சாலையில் கடந்த மாதம் 13ம் தேதி ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வட மாநில தொழிலாளி போல் உள்ளார். அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe