காவலர் குடும்ப சுயத்தொழில் கண்காட்சியில் என் இனிய பொன் நிலாவே பாடலை பாடி அசத்திய ஆயுதப்படை உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ....

published 1 year ago

காவலர் குடும்ப சுயத்தொழில் கண்காட்சியில் என் இனிய பொன் நிலாவே பாடலை பாடி அசத்திய ஆயுதப்படை உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ....

கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் குடும்பத்தினரின் சுயதொழில் கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர காவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேஜிக் ஷோ உட்பட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கலை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்ட கோவை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ரகுகுமார் "என் இனிய பொன் நிலாவே" என்ற பாடலை பாடி அசத்தினார். இவரது பாடலை கேட்ட அனைத்து காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் அவரை வெகுவாக பாராட்டினர்.

காவலர் பாடிய வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/ELRU90twgJs?si=QnI4u9SV-dsl0MUu

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe