பெண் கால்டாக்ஸி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது...

published 1 year ago

பெண் கால்டாக்ஸி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது...

கோவை: கோவைப்புதூர் அழகு நகரை சேர்ந்தவர் கலைசெல்வி(51). இவர் சொந்தமாக கார்களை வைத்து கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டு வந்தார். இவரிடம் சுந்தராபுரம் வெங்கிடசாமி லே-அவுட்டை சேர்ந்த ராஜ்குமார்(27) என்பவர் டிரைவராக வேலை பார்த்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார். 

ஆனால் அவரது ஓட்டுநர் உரிமம் கலைசெல்வியின் தந்தை சுப்பிரமணியத்திடம் இருந்ததாகவும், அதனை திரும்ப கொடுப்பதில் அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் ராஜ்குமார் தனது நண்பர் ஒருவருடன் கலைசெல்வி வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் சுந்தராபுரத்தை சேர்ந்த வினோத்(21) ஆகிய இருவரும் சேர்ந்து கலைசெல்வியை தகாத வார்த்தைகளால் பேசி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து கலைசெல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் வினோத்தை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe