குளியலறையில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு...

published 1 year ago

குளியலறையில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு...

கோவை: கோவை ரத்தினபுரி பாரதி தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ஜானகி(38). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோட்ட பரமாரிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில், நேற்று ஜானகி வீட்டு குளியலறைக்கு சென்றார். நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜானகி குளியலறையில் தவறி விழுந்து மயங்கி கிடந்தார். 

உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe