பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு- வாலிபருக்கு கத்திக்குத்து...

published 1 year ago

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு- வாலிபருக்கு கத்திக்குத்து...

கோவை: கோவையில் பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தான் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(20). கூலி தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(25) என்பவரிடம் ரூ. 200 கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தினேஷ் நேற்று அங்குள்ள சிக்கன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர் சந்துரு(19) ஆகியோர் வந்தனர். தினேசிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி தினேசை கத்தியால் குத்தி மிரட்டி விட்டு சென்றனர்.

கத்தி குத்தில் தினேசுக்கு கழுத்து மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கத்தியால் குத்திய நல்லாம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் ஜீவானந்தம் மற்றும் சந்துருவை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe