உஷார்... பீளமேட்டில் ஏல நகையை மீட்டு கமிஷன் தருவதாக கூறி ரூ. 6.30 லட்சம் மோசடி!

published 1 year ago

உஷார்... பீளமேட்டில் ஏல நகையை மீட்டு கமிஷன் தருவதாக கூறி ரூ. 6.30 லட்சம் மோசடி!

கோவை: கோவையில் ஏல நகையை மீட்டு கமிஷன் தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூ. 6.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு கருப்பராயன் பாளையம் கிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (33). டிரைவர். இவர் வசிக்கும் குடியிருப்பில் 2வது மாடியில் ஆனந்தகுமார் (40) என்பவர் குடியிருந்து வருகிறார்.

இவர் வங்கியில் கடன் பெற்றுக் கொடுக்கும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தகுமார், ஞானவேலிடம் கேரளாவில் உள்ள ஒரு வங்கியில் அடகு நகைகள் ஏலம் விடப்படுகின்றன.

அந்த நகைகளை ஏலம் எடுத்தால் அதிக லாபம் கிடைக்கும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் பணம் கொடுத்தால் 10% கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி ஞானவேல் 2 கட்டங்களாக ரூ. 1 லட்சம் ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு அவர் கமிஷன் தராமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

இது குறித்து ஞானவேல் பீளமேடுபோலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ஆனந்தகுமார் இதே போல், மேலும் இரண்டு பேரிடம் ரூ. 5.30 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது ஏமாற்றுதல் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe