சிங்காநல்லூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு!

published 1 year ago

சிங்காநல்லூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு!

கோவை: கோவை சிங்காநல்லூர் சின்ன குருசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் நேற்று நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்.

அப்போது இரண்டு வாலிபர்கள் அப்பகுதி வாசிகளிடம் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை விஜயகுமார் கண்டித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த இரண்டு வாலிபர்களும் கத்தியை காட்டி விஜயகுமாரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.180ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து விஜயகுமார் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் விசாரணையில் விஜயகுமாரிடம் கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்தது சிங்காநல்லூர் கமலா மில் குட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயன் (25), மற்றும் சிங்காநல்லூர் சின்ன குருசாமி லே அவுட்டை சேர்ந்த மெக்கானிக் கௌதம் (25) என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe