அறிமுகமாகிறது கிலோ ரூ.25க்கு பாரத் அரிசி : எங்கு வாங்கலாம்?

published 1 year ago

அறிமுகமாகிறது கிலோ ரூ.25க்கு பாரத் அரிசி : எங்கு வாங்கலாம்?

கோவை: அரிசி விலை தொடர் அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் கிலோ ரூ.25க்கு அரிசி விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கோதுமை மாவு பாரத் ஆட்டா என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.27.50க்கும், பருப்பு வகைகள் பாரத் டால் என்ற பெயரில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே அரிசி விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பாரத் அரிசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக கிலோ ரூ.25க்கு அரிசி விற்பனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக பாரத் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe