கோவை மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா வழங்கிய போலீஸ்..!

published 1 year ago

கோவை மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா வழங்கிய போலீஸ்..!

கோவை: கோவை மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்த விவகாரத்தில் போலீஸ்காரரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது தண்டனை கைதி திருப்பூரை சேர்ந்த ஜெயராமன்(23) என்பவர் ஆசனவாயில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறையில் உள்ள மற்றொரு கைதி பார்த்தசாரதி(31) என்பவர் ஒரு வாரத்திற்கு முன் ஜெயராமனிடம் கஞ்சாவை கொடுத்து மறைத்து வைக்கும்படி தெரிவித்ததாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் பார்த்தசாரதியிடம் விசாரணை செய்தபோது, அவர் கோவை  மத்திய சிறையில் உள்ள தலைமைக் காவலர் ஒருவர் கஞ்சாவை தனக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள், சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக போலீஸ்காரர் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான், அந்த போலீஸ்காரர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தாரா? அவர் மீதான நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிய வரும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe