படிக்கட்டில் தவறி விழுந்து காவலாளி பலி…

published 1 year ago

படிக்கட்டில் தவறி விழுந்து காவலாளி பலி…

கோவை: ஒடிசாவை சேர்ந்தவர் சரோஜூ பிரதான்(38). இவர் சுண்ணாம்பு காளவாய் பாலக்காடு ரோட்டில் உள்ள செயல்படாத மருத்துவமனையில் தங்கி, அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக சரோஜூ பிரதான் மருத்துவமனை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு நெற்றி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அவருடன் பணிபுரியும் சில ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe