இருகூரில் மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது…

published 1 year ago

இருகூரில் மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது…

கோவை: கோவையில் குட்கா விற்ற மளிகைக்கடை உரிமையாளரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவையில் உள்ள மளிகைகடை, பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இருகூரில் உள்ள மளிகைக்கடையில் புகையிலைப்பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், சுவாகத் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் புகையிலைப்பொருள் விற்ற மளிகைக்கடைக்காரர் இருகூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40) என்பவரை கைது செய்தனர். கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe