மழை காரணமாக கோவை வரும் 2 ரயில்கள் பகுதியாக ரத்து

published 2 years ago

மழை காரணமாக கோவை வரும் 2 ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, ஜூலை.2- வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை - சில்சாா், திருவனந்தபுரம் - சில்சாா் ஆகிய 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை - சில்சாா் வாராந்திர ரயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி - சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சில்சாா் - கோவை வாராந்திர ரயில் (எண்: 12516) ஜூலை 5,12 ஆகிய தேதிகளில் குவாஹாட்டியில் இருந்து கோவை இடையே இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோன்று திருவனந்தபுரம் - சில்சாா் வாராந்திர ரயில் (எண்:12507) ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி -சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சில்சாா் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்12508) ஜூலை 7, 14 ஆகிய தேதிகளில் குவாஹாட்டி - திருவனந்தபுரம் இடையே மட்டும் இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe