கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.55 லட்சம் மோசடி...

published 1 year ago

கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.55 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.55 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் ஆனந்தம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சரண்யா (33). இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருச்சி ரோட்டில் உள்ள கார் ஷோரூமில் விற்பனை பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது திருச்சி துறையூர் நடுபட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (31) என்பவர் சரண்யாவிடம், எனக்கு அரசு அதிகாரிகள் பலர் தெரியும். அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி ரூ.1.55 லட்சத்தை சரண்யாவிடம் பெற்றதாக கூறப்படுகிறது. 

ஆனால், அவர் கூறிய படி அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து சரண்யா சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.55 லட்சம் மோசடி செய்த ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe