ஐடி பெண் ஊழியர் உட்பட 3 பேரிடம் நகைகள் பறிப்பு- மர்ம நபர்களை தேடி வரும் போலிசார்...

published 1 year ago

ஐடி பெண் ஊழியர் உட்பட 3 பேரிடம் நகைகள் பறிப்பு- மர்ம நபர்களை தேடி வரும் போலிசார்...

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் ஐடி பெண் ஊழியர் உட்பட 3 பேரிடம் 8 பவுன் நகை பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் நேரு தெருவை சேர்ந்தவர் ராஜ வசந்தி (59). இவர் நேற்று தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ராஜ வசந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ வசந்தி இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.

கோவை ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் ஹர்ஷினி (25), ஐடி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென ஹர்ஷினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார். புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கோவை பீளமேடு மேற்கு நேரு நகரை சேர்ந்தவர் ஆக்னஸ் லதா (43). இவர் நேற்று முன்தினம் இரவு நேரு நகர் 6வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் 2 மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் இருந்து இறங்கி வந்த ஒருவன் திடீரென ஆக்னஸ் லதாவை கத்தி முனையில் மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செயினை விடாமல் தனது கையால் பிடித்து கொண்டார். இதில் செயின் அறுந்ததில் 2.5 பவுன் தங்க செயினுடன் மர்ம நபர் பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe