கோவையில் கல்லூரி மாணவரை மிரட்டி லேப்டாப், செல்போன்கள் பறிப்பு...

published 1 year ago

கோவையில் கல்லூரி மாணவரை மிரட்டி லேப்டாப், செல்போன்கள் பறிப்பு...

கோவை: கோவையில் கல்லூரி மாணவரை மிரட்டி லேப்டாப், செல்போன்கள் பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் தேகேஷ்குமார்(23). இவர் தனது நண்பர்கள் சிலருடன் கோவை ஈச்சனாரி அய்யப்பா நகரில் வீடு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அறையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி(22) என்பவர் தங்கியிருந்தார். பின்னர் அவர் காலி செய்து சென்று விட்டார். 

இந்நிலையில், நேற்று தேகேஷ்குமாரின் வீட்டுக்கு வந்த 2 பேர் கருப்பசாமி எங்கே என கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கத்தி மற்றும் இரும்பு பைப்பை காட்டி மிரட்டி அறையில் இருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 2 லேப்டாப், 3 செல்போன்களை பறித்து அங்கிருந்து சென்றனர். இது குறித்து தேகேஷ்குமார் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், லேப்டாப், செல்போன் பறித்து சென்றது சுந்தராபுர்ம மாச்சம்பாளையம் அம்மாள் காலனியை சேர்ந்த சிஎன்சி ஆபரெட்டர் கவுதம்(21), மற்றும் குறிச்சியை சேர்ந்த பெயிண்டர் கமலக்கண்ணன்(27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன், 2 லேப்டாப் மீட்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe