எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் கோயிலில் திருட முயன்ற வாலிபர் கைது…

published 1 year ago

எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் கோயிலில் திருட முயன்ற வாலிபர் கைது…

கோவை: கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி மூகாம்பிகை நகரில் எல்லை கருப்பராயன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கணேசன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று காலை கோயிலுக்கு சென்றார். அப்போது உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கணேசன் சிலரது உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். மேலும் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் புகுந்த அந்த வாலிபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆட்கள் வருவதை பார்த்து தப்பி செல்லமுயன்றதும் தெரியவந்தது. 

இதனையடுத்து பிடிபட்ட அந்த நபரை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோயிலில் திருட முயன்றது தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியை சேர்ந்த ரிக்கி பாண்டி(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe