பொங்கல் தொகுப்பு திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்; எல்லோருக்கும் ரூ.1000 கிடையாது..

published 1 year ago

பொங்கல் தொகுப்பு திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்; எல்லோருக்கும் ரூ.1000 கிடையாது..

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று துவங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பரிசு தொகுப்புகள் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. ஆனால் அதில், ரொக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளும், மக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த சூழலில் குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அனைத்து அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அவசர கதியில் அறிவிப்பு வெளியானது.

இதனால் சர்க்கரை அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அரிசி அட்டைகளுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு நிபந்தனைகள் இன்றி அரிசி அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் ரூ.1,000 பரிசுத்தொகை மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்புகள்  வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை இன்று சென்னையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe