புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் வாலிபர் கைது...

published 1 year ago

புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் வாலிபர் கைது...

கோவை: கோவையில் புகையிலைப்பொருட்கள் விற்ற ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்து 118 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில் மளிகைக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அவர் ஹான்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலைப்பொருட்கள் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் நர்பத் சிங்(27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 118 கிலோ புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe