மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்- ஜமாப் நடனம், கயிறு இழுத்தல் என கலக்கிய மாவட்ட ஆட்சியர்..!

published 1 year ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்- ஜமாப் நடனம், கயிறு இழுத்தல் என கலக்கிய மாவட்ட ஆட்சியர்..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்தபடி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோலமிட்டு பொங்கல் வைத்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா , சக ஊழியர்களுடன் இணைந்து கோலமிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார். புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் , அதிகாரிகள் ஜமாப் இசைக்கு ஏற்றபடி நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஊழியர்களுக்கு கயிறு இழுத்ததல், உறி அடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு அரசு ஊழியர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கு நடனமாடியது கயிறு இழுத்தது, அனைவரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe