கோவை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர்; இன்று பொறுப்பேற்றார்.!

published 1 year ago

கோவை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர்; இன்று பொறுப்பேற்றார்.!

கோவை: கோவை மாநகரின் புதிய (தெற்கு) துணை ஆணையராக சரவணகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவையில் துணை ஆணையர்களாக பணியாற்றி வந்த சந்தீஷ் மற்றும் சண்முகம் ஆகியோரும் இடமாற்றத்திற்கு உள்ளாகினர்.

கோவை மாநகர தெற்கு துணை ஆணையராக சண்முகம் பணிபுரிந்து வந்த நிலையில் அவர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த சரவணகுமார் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டார்.

அதன்படி மாநரின் புதிய துணை ஆணையராக சரவணன் இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு போலீசார் சார்பில், அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதிய துணை ஆணையருக்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe