நாளை துவங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

published 1 year ago

நாளை துவங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

கோவை: தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில்
நாளை தமிழகத்தில் துவங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் இப்போட்டியினை சென்னையில் இருந்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவகல்லூரி உள்விளையாட்டு அரங்கு, மற்றும் கேபிஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிலையில் பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டியும் தாங் டா போட்டியும் நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe