கோவையில் நீட் தேர்வில் மோசடி; உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை…

published 1 year ago

கோவையில் நீட் தேர்வில் மோசடி; உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை…

கோவை: நீட் தேர்வில் மோசடி செய்த நபர் குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக விண்ணப்பித்தார். அதற்காக அவர் மதுரையில் இரண்டு போலியான முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் போலியான ஒரு முகவரியும் தயாரித்து மூன்று தேர்வு மையங்களில் விண்ணப்பித்துள்ளார்.

மேலும் அந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளில் பணிபுரிவதாகவும் போலி ஆவணங்களையும், முகவரியையும் தயாரித்து உள்ளார்.

அதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதினார். அதில் அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றார். தொடர்ந்து புனேவில் உள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.டி., படிப்பதற்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினார். அதன் பின் அவர் மருத்துவ மேற்படிப்பில் சேரவில்லை. இதனால் மருத்துவ கவுன்சிலுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் உளவுப்பிரிவு போலீசார் மூலமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe