நாளை தபால் நிலையம் அரை நாள் விடுமுறை- அறிவிப்பு பலகையை வைத்த தலைமை தபால் நிலையம்...

published 1 year ago

நாளை தபால் நிலையம் அரை நாள் விடுமுறை- அறிவிப்பு பலகையை வைத்த தலைமை தபால் நிலையம்...

கோவை: கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மதியம் 2:30 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை(22.01.2024) அரை நாள் விடுமுறை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை பிற்பகல் வரை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe