கணபதி பகுதியில் வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு…

published 1 year ago

கணபதி பகுதியில் வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு…

கோவை: கோவை கணபதி ஸ்ரீதேவி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(36). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். 

பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 2 1/4 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 15 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். 

இது குறித்து செல்வகுமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe