பியூட்டி பார்லரில் பணம் திருடியவர் கைது..

published 1 year ago

பியூட்டி பார்லரில் பணம் திருடியவர் கைது..

கோவை: கோவை நியூ சித்தாபுதூர் விகேகே மேனன் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(42). இவர் பாரதியார் ரோடு திருவள்ளுவர் தெருவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்வரி பியூட்டி பார்லரை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில், நேற்று அதிகாலை ராஜேஷ்வரி தற்செயலாக தனது செல்போனில் லிங்க் செய்யப்பட்டிருந்த பியூட்டி பார்லர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். 

அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து பியூட்டி பார்லருக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ. 3 ஆயிரத்தை திருடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே இது குறித்து தனது சகோதரருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து சென்று திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பணம் திருடியது சென்னை திருவொற்றியூரை சேர்ந்த வெங்கடேசன்(62) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe