குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?- கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்...

published 1 year ago

குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?- கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்...

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஜேஜே.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த  நாய் மற்றும் பூனை உள்ளிட்டவை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.  இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை தான் வேட்டையாடுவதாக தகவல் பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் இன்று ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில்  சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும்  இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில்  வனத்துறையினர்  கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe