ரஷ்யாவில் நடைபெற உள்ள சர்வதேச மகளிா் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி-தகுதிப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற வீராங்கனைகள்!

published 1 year ago

ரஷ்யாவில் நடைபெற உள்ள சர்வதேச மகளிா் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி-தகுதிப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற வீராங்கனைகள்!

கோவை: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான தேர்வு கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கேலோ இந்தியா ஆதிக்கம் செலுத்திய வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவில் சாதித்த வீராங்கனைகள் உட்பட நாடு முழுவதும் இருந்து 130 பேர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து வூஷூ அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சபீர் செய்தியாளர்களிடம்  பேசும்போது, ரஷ்யாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து இந்த போட்டிகளில் பங்கேங்கேற்க 40 தகுதி வாய்ந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான தகுதி போட்டிகளில் சுமார் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 130 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற வூஷூ சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள் கிடைத்தது. இந்த முறை கூடுதல் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில் அதிக அளவில் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe