ஜனவரி 30ம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை…

published 1 year ago

ஜனவரி 30ம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை…

கோவை: ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க கோரி தமிழ்நாடு பொதுமேடையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு பொதுமேடை அமைப்பினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் மகாத்தா காந்தி சுட்டு கொலைச் செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இந்திய மக்களால் தேச தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி தனது இறுதி காலத்தில் மத சார்பற்ற, சனாதனமற்ற இந்தியா அமைய வேண்டும் என முடிவு செய்தார். இதன் காரணமாக பார்பன சாதுராம் கோட்சே காந்தியை சுட்டுகொன்றார்.

எனவே மத ஒன்றுமையை வலியுறுத்திய காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் மதவெறி எதிர்ப்பு நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe