துடியலூர் அருகே உரிய அனுமதியின்றி பேனர் பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு…

published 1 year ago

துடியலூர் அருகே உரிய அனுமதியின்றி பேனர் பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு…

கோவை: கோவையில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜ நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை துடியலூர் காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது என்ஜிஜிஓ காலனி ஜங்சன் அருகே உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், அந்த பேனரை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல பாஜ தலைவர் சரவணகுமார் மற்றும் துணைத்தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe