ஏர்கலப்பை, மண்வெட்டி, மண்சட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்...

published 1 year ago

ஏர்கலப்பை, மண்வெட்டி, மண்சட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்...

கோவை; தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மண்வெட்டி, ஏர் கலப்பை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

அப்போது அவர்கள் விவசாய தொழிலாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட நல வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு உதவாத உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  எனவே இதனை கைவிட்டு விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும், கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe