கோவையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சியை விழாக்கோலமாக்கிய மாணவிகள் - புகைப்படங்கள்..!

published 1 year ago

கோவையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சியை விழாக்கோலமாக்கிய மாணவிகள் - புகைப்படங்கள்..!

கோவை: கோவையில் பல்வேறு பள்ளிகளிலும் குடியரசு தினத்திற்கான கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

கோவையில் வழக்கமாக குடியரசு தினத்தில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்திலும், பள்ளி கல்லூரி வளாகங்களில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கோவையில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், வெவ்வேறு விதமான டிரில்கள், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe