எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்- அதிமுக எம்.எல்.ஏ க்கள் மனு…

published 1 year ago

எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்- அதிமுக எம்.எல்.ஏ க்கள் மனு…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்திருந்தனர். எம்.எல்.ஏ, கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேர் மீது பெண்கள் வன்கொடுமை உட்பட 4 பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்திடவும், தொகுதி பங்கீட்டு நிதியை வழங்கிட உத்தரவிடகோரியும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனுவை அளித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை ஒதுக்கிட வலியுறுத்த சென்ற போது எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வாக்குவாதம் ஆனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து
மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ 
ஏ.கே. செல்வராஜ் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உட்பட அதிமுகவினர் ஒன்பது பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுவும் பெண்கள் வன்கொடுமை சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல் உட்பட நான்கு பிரிவுகளில் மேட்டுப்பாளையம்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe