கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

published 2 years ago

கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை.

கோவையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட மேம்பாட்டு பணிகள் முறைகேடுகள் ஏற்பட்டதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய  நபர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

புதன் கிழமை எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிமுக பிரமுகர் வடவள்ளி சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை மாநகராட்சி பொறியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் வைத்து நடைபெற்ற இந்த  விசாரணையில், மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர் துறை சார்ந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.

மாநகராட்சி பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களிடம் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன? மாநகராட்சி டெண்டர் வழங்கப்பட்ட விதம், ஒப்பந்தங்களில் பிரச்சனை மற்றும் அதற்கு தீர்வுகாணப்பட்ட முறை குறித்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe