கேலோ இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் தங்கம் வென்றது...

published 1 year ago

கேலோ இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் தங்கம் வென்றது...

கோவை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில், தமிழக ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான அணி 85 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணி 86 புள்ளிகள் பெற்று வெற்றியை தட்டிச் சென்றது.

மகளிர் பிரிவு இறுதி சுற்றுப் போட்டியில், தமிழ்நாடு மகளிர் கூடைப்பந்தாட்ட அணி பஞ்சாப் அணியோடு மோதியது. இதில் பஞ்சாப் அணி 66 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணி 70 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்தது.

ஆடவர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் அணிகள் மோதின. இதில் 76 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல், மகளிர் பிரிவில் மத்திய பிரதேசத்தோடு மோதிய மகாராஷ்டிரா அணி, 90 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் ஆகியோர் பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe