கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபர்- போலிசார் வழக்குப்பதிவு...

published 1 year ago

கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபர்- போலிசார் வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் திருமணம் நிச்சயமான பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு கடந்த 14ம் தேதி கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருகிற மார்ச் மாதம் திருமணம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி, நீ அந்த வாலிபரை திருமணம் செய்ய கூடாது. நான் உன்னைதான் திருமணம் செய்வேன் என டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபரின் வீட்டுக்கு சென்று நீ அவரை திருமணம் செய்ய கூடாது என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வேறொருவருடன் திருமணம் நிச்சயமான பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த கோவைப்புதூரை சேர்ந்த வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe