குடியரசு தினத்தில் கோவையில் சட்டவிரோத மதுவிற்பனை- 35 பேர் கைது…

published 1 year ago

குடியரசு தினத்தில் கோவையில் சட்டவிரோத மதுவிற்பனை- 35 பேர் கைது…

கோவை: கோவையில் விடுமுறை நாளில் மது விற்ற 35 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 385 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குடியரசு தினமான நேற்று டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், போலீசார் மற்றும் மது விலக்கு அமல்பிரிவினர் கோவை நகரில் காட்டூர், ரேஸ்கோர்ஸ், பீளமேடு, சாயிபாபா காலனி, ரத்தினபுரி, துடியலூர், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 385 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe